கற்பனையின் வறட்சியில்
மறைந்து போனது
எனது கவிதைகள் ?
எதை எழுதுவது ?
குறிக்கவிதைகள் எழுத
நான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் இல்லையே !
ஆத்திரம் தீர 'தீர்த்த' யாத்திரை செய்து
தினம் எழுத நான்
நாமக்கல்லார் இல்லையே !
கவிஜை எழுதி அதை கிண்டல்
அடிக்க நான் சாத்ததன் குளத்துக்காரர் இல்லையே !
காதல் கவிதை எழுதி
கலங்கடிக்க நான்
அருட்பெருங்கோ இல்லையே !
பாதிப்பில் படித்ததை
வடித்து வைக்க நான்
எஸ்கே ஐயா இல்லையே !
தேமா புளிமா அறிந்து
கட்ட(ட)ம் கட்டி எழுது நான்
இலவச கொத்தனார் இல்லையே !
'எழுச்சி' கவிதை எழுத
'குறி' சொற்களை தேட நான்
பொட்'டீ'க்கடை சத்தியா இல்லையே !
கற்பனை வறட்சியை தீர்க்க
எனக்கும் ஒரு மழைத்துளி
வேண்டி பருவ 'காலத்திற்காக' தவமிருந்தபடி
தற்போது நின்று கொண்டு இருக்கிறேன்
எங்கே எனது கவிதை ?
--
அன்புடன்,
கோவி.கண்ணன்
மதியம் புதன், ஆகஸ்ட் 1, 2007
எங்கே எனது கவிதை ?
Posted by
கோவி.கண்ணன்
at
7
comments
Labels: கொலைவெறி
Subscribe to:
Posts (Atom)