ஜட்டிக் கவுஜைகள்-1

என்றைக்காவது ஒருநாள்
இன்று போலவே
என்னுடையதும் தொலைந்து
போயிருக்கும்
ஜட்டிகளின் வழியே காணக்
கிடைக்கும்,
கனவுலகம் ஒன்று
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
ஆப்பிள்
இலைகளையாவது
வைத்திருந்தது
இந்த சாத்தானின் சதிவலை
புரியாமல் ஜட்டி போடுவதும் குட்டி
தேடுவதும் வாழ்கை என்று
அலையும் சிலரை
முட்டிக்கு முட்டி தட்டினால் என்ன?
-மகேந்திரன்.பெ
Posted by
Unknown
at
2
comments
விட்டில் பூச்சி
உற்றுப் பார்த்திருக்கும்
கண்களாய் கவிழ்ந்துகிடக்கும்
குப்பைத் தொட்டியருகில்
குலைக்கத் திராணியற்று
வெற்றுடம்பாய்க் கிடக்கும்
சொறிநாயின் சிந்தனைகள்
என்னவாகவிருக்க
முடியும்
என்று எனக்குள்ளே
கருவியபடி காத்திருத்தலின்
அவசியம் ஏதுமின்றி
பிணியிழந்த சடலமொன்று
கடந்து போன பாதைமீது
வைத்த விழி
வாங்காத வண்ணத்தப்
பூச்சியும், வருகை தராத
அரை டவுசர் மாணவனும்
கும்மியடிக்கக் கிளம்பிவிட
வெற்று வகுப்பரையில்
விட்டத்தை வெறித்துப் பார்த்தே
சிதறிப் போன கண்ணாடித்
துண்டுகளைச் சேகரிக்கும்
விட்டில் பூச்சியொன்று
என் கட்டிலருகே
விளக்கைத் தேடி!
-நாமக்கல் சிபி
Posted by
Unknown
at
4
comments
மீண்டும்

வார்த்தைகளற்ற
சூனியத்தின் நீட்சியில்
பிரக்ஞையற்று
மௌனத்தின் மீதேறிய
பயணத்தில்
பார்வைகளின்
விளிம்புகளை விட்டு
விலகிச் செல்லும்
ஊர்திகளாய்ப் போன
உள் மனதின்
ஊணர்வுகளோடு
ஒரு பொழுதேனும்
சண்டையிடத் திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!
Posted by
நாமக்கல் சிபி
at
7
comments
Labels: கொலைவெறி
கவிதையெல்லாம் ரத்தம்
விஷம் தோய்ந்த கத்திகளோடு
நடமாடுகின்றன
காற்றின் பிணங்கள்
என் சிறு வயிற்றில் கீறலுடன்
கொலைததும்ப வழிகிறது குடல்
மதுபாட்டிலும் மறுகையில்
குறுவாளும் கொண்டு காற்றாடி
வழியே வானத்தை அளக்கிறேன்
எல்லா நிழல்களைப் போலவும்
என் பின்னேயும் தேய்ந்து மறைகிறது
ஒரு சின்ன ஒளிக்கீற்று
பின்னே முன்னே எந்த தடயமும் அற்ற
பெரிய கதவுகள் வழியே
தெறித்து தாவுகிறது உன் உயிர்
இன்னும் கொஞ்சம் காலம்
தேய்ந்திருக்க
எப்போது வருமென்று தெரியாமல்
என்னை பின்தொடர்ந்தே
வருகிறது
ரத்தம் தெறிக்கும் வரிகளுடன் ஒரு
கவிதை.
Posted by
Unknown
at
1 comments
எங்கே எனது கவிதை ?
கற்பனையின் வறட்சியில்
மறைந்து போனது
எனது கவிதைகள் ?
எதை எழுதுவது ?
குறிக்கவிதைகள் எழுத
நான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் இல்லையே !
ஆத்திரம் தீர 'தீர்த்த' யாத்திரை செய்து
தினம் எழுத நான்
நாமக்கல்லார் இல்லையே !
கவிஜை எழுதி அதை கிண்டல்
அடிக்க நான் சாத்ததன் குளத்துக்காரர் இல்லையே !
காதல் கவிதை எழுதி
கலங்கடிக்க நான்
அருட்பெருங்கோ இல்லையே !
பாதிப்பில் படித்ததை
வடித்து வைக்க நான்
எஸ்கே ஐயா இல்லையே !
தேமா புளிமா அறிந்து
கட்ட(ட)ம் கட்டி எழுது நான்
இலவச கொத்தனார் இல்லையே !
'எழுச்சி' கவிதை எழுத
'குறி' சொற்களை தேட நான்
பொட்'டீ'க்கடை சத்தியா இல்லையே !
கற்பனை வறட்சியை தீர்க்க
எனக்கும் ஒரு மழைத்துளி
வேண்டி பருவ 'காலத்திற்காக' தவமிருந்தபடி
தற்போது நின்று கொண்டு இருக்கிறேன்
எங்கே எனது கவிதை ?
--
அன்புடன்,
கோவி.கண்ணன்
Posted by
கோவி.கண்ணன்
at
7
comments
Labels: கொலைவெறி
Feliz cumpleaños querido Kappi Paya
Como las palabras deben
ser nuestro medio,
un poema, Quizás,
bien pueden mis deseos del
cumpleaños enviar,
Poemas que son retratos
internos hacia fuera en préstamo.
Con todo sería un paisaje
en las montañas, Sol brillante
que estropea un cielo vacío,
Caras inmensas de la
roca que contestan a
todas las preguntas,
Resolución de toda en qué
en vez de porqué.
Usted envío una esperanza
de la felicidad
Cercado con las
rosas que se erizan en
el viento, Hacer el deber
doble para su amante Como
centinelas contra los trucos
de la mente, Con todo
engañando bien el amor
que hace
clase de la vida.
Posted by
Unknown
at
9
comments


