அவன் என் ஜாக்கி ஜட்டி......

அவன்.... அவனை அணியவில்லை என்றால் தான் சுகம். தூக்கியெறிந்து சுதந்திரமாக இருக்கலாம் என்றால்
என்னருகில் இருக்கும் கார்ப்ரேட் கன்னிகள் நலன் பேணி 
அவன் என்னுடன் ஒட்டிக்கொள்கிறான். இரவினில் பாலியியல் வறட்சியால் 
நான் சிந்தும் கண்ணீரை காத்து தனக்குள்
வாங்குபவனும் அவனே.... பலமுறை என் கால்சட்டையின் 
பற்கள் படாமல் காத்தவன் அவன். காதலியின் அவசரத்துக்கு ஈடுகொடுத்து
அவளுக்கு இணையாக ஆடையவிழ்ப்பில் 
தோல்வியடைய காரணமும் அவன். அவன் என் ஜாக்கி ஜட்டி...... __ இலக்கியம் படிக்காதவன்.
https://www.facebook.com/profile.php?id=100007511465255

கோவணங்களால் ஆனது என் வேட்டி


ஒரு காலத்தில்
என் பாட்டனும் பூட்டனும்
கோவணங்களை வேட்டிகளைக்
கொண்டே தயார் செய்துகொண்டனர்
புதுக் கோவணம் என்ற சொற்ப் பதமே
அப்போது இருந்திருக்காது
இப்போது போல
அப்போது ஜாக்கியோ
கால்வினோ இல்லை
இருந்ததெல்லாம் பழைய நைந்து போன
வேட்டி மட்டுமே
அதுவும் அந்த வேட்டி இனிமேல்
கோவனத்துக்கு மட்டுமே
ஆகும் என்ற காலமான
காலம்
இப்போது லுங்கியும்
வேட்டியும் அணிபவனைக்
கண்டால் ஏளனமாய் பார்க்கும்
எல்லோரின் முன்னோர்களும்
ஒரு காலத்தில் அந்த கிழிந்த வேட்டியையே
கோவனமாக
அணிந்த உண்மையை நாம்
உரக்கச் சொல்வோம்.


புவியீர்ப்பு என்னும் ஏகாதிபத்திய சக்தி

பிரபஞ்சப் பெருவெளியில் 
விளைந்திருக்கும் 
நட்சத்திரப் பயிர்களை 
உய்விக்க எண்ணியே 
உமிழ்ந்து விடுகிறேன் 
மல்லாக்கப்படுத்துக்கொண்டு 

எனது ஜீவ எச்சிலை 
அங்கே எடுத்துச் செல்லாத 
புவியீர்ப்பு என்னும் 
ஏகாதிபத்திய சக்தியை சாடுங்கள் .

என் எச்சில்பட்டு 
போதியாய் பூமி நோக்கி 
வளர எண்ணிய 
நட்சத்திரப் நாற்றுகளின் 
நல்லக்கனவை நாசமாக்கியது ஏன் என்று ..!!


....உமா மகேஸ்வரன் லாஓட்சு

வன்புணரப்பட்ட ஜட்டி

நீர்வழிப் படூஉம் புனைப்போல் 
வாஷிங் மிஷின் வழிப்படும் 
ஜீன்சுக்குள் பின்னிப்பிணைந்த ஜட்டியொன்று 

எழுப்பிய கூக்ககுரல் 
detergent பிரளயத்தில் சன்னமாய் அழிந்திருக்கும் 

எங்கோ ஓர் மூலையில் 
இன்னும் ஈரமாய் இருக்கும் 
ஒரு பட்டாபட்டி 
கண்ணீருடன் கதறிக்கொண்டிருக்கும் 

தனது பேரப்பிள்ளையான 
90 cm ஜட்டி 
whirlpool machineனால் வன்புணர்வுக்கு ஆளான 
வக்கிர நிகழ்வையெண்ணி ..

துவைத்துக் கிழித்தவர்..
உமா மகேஸ்வரன் லாஓட்சு

தங்கமணி சிறப்புக் கவிதை !

காஃபிக்கு எப்படி தே(ன்)நீர் சுவை அளிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?

கைப்பக்குவம் தான் சொல்லுவார்கள், உன் 'கால்' பக்குவம்
எனக்கு மட்டும் தான் தெரியும். ஆமாம்,
நீ செல்போனில் அழைத்தால் செல்போனே அதிருது...வைப்ரேசன் !

என்னிடம் உனக்கு இருப்பது தோழமையா ? அன்பா ?
வாங்கும் குட்டுகளில் என்றும் தலைக் குழப்பம் தான்,
அப்பளக் குழவிக்கு விடை தெரிந்திருக்கலாம் !

நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !

இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது, எதற்கும்

புடைப்படையும் முன் முன்னச்செரிக்கையாக சொல்லிவிடுகிறேன்
ஏப்ரல் 1 க்கு இதற்கும் மேல் பொய் கூற மூடியா ?

http://kusumbuonly.blogspot.com/2009/02/ar.html

ஜட்டிக் கவுஜைகள்-1


என்றைக்காவது ஒருநாள்
இன்று போலவே
என்னுடையதும் தொலைந்து
போயிருக்கும்
ஜட்டிகளின் வழியே காணக்
கிடைக்கும்,
கனவுலகம் ஒன்று
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
ஆப்பிள்
இலைகளையாவது
வைத்திருந்தது
இந்த சாத்தானின் சதிவலை
புரியாமல் ஜட்டி போடுவதும் குட்டி
தேடுவதும் வாழ்கை என்று
அலையும் சிலரை
முட்டிக்கு முட்டி தட்டினால் என்ன?

-மகேந்திரன்.பெ