மதியம் சனி, ஜூலை 28, 2007

கொலைவெறிக் காதல்


விரல் இடுக்குகளில்

ஒட்டியிருக்கும்

சிறு பருக்கைகளை

நாவால் நக்கியபடியே

காலாட்டிக்கொண்டு

தூங்குகிறது

ஒரு பெட்டை நாய்

இதழ்கள் ஓரம் கொடூரம்

சுமந்தபடி

பூணை ஒன்றின் திடீர்

வருகை உறக்கம் கலைக்க

மெல்ல எழுந்து சோம்பல்

முறிக்கிறது கால

இடைவெளிகள்

விளக்கணைத்ததும் வரும்

விட்டில் பூச்சிகளின்

விருப்பமான எண்ணெய்
தடவிய காகிதம் போல

உனக்கும் எனக்கும்

இன்னும் இருகிறது எதோ

பந்தம்

உன் நினைவுச் சுமைகளில்

என் காலடித்

தடம் பற்றி என்னை

துரத்துகிறது உன்

கொலைவெறிக்

காதல்

12 comments:

நாமக்கல் சிபி said...

காதல் பட கிளைமாக்ஸ் மாதிரி ஆக்கிடுச்சே இந்தக் கவிதை!

Unknown said...

:)

Anonymous said...

ஆன் லைன்ல தான் இருக்கீறா?

சிவபாலன் said...

Interesting! Good!!

கோபிநாத் said...

எப்படி ஐயா இப்படி எல்லாம் ;-(((

அபி அப்பா said...

அருமையான கொலவெறி! சூப்பர்!!

Anonymous said...

//காதல் பட கிளைமாக்ஸ் மாதிரி ஆக்கிடுச்சே இந்தக் கவிதை! //

கல்லாலயே அடிப்பாய்ங்களோ?

Anonymous said...

//எப்படி ஐயா இப்படி எல்லாம் ;-((( //

ஏ புள்ள இங்க பாரேன் ஒரு கண்ணாடிக் காரு எப்படின்னு கேள்வி க்கேக்குறாரு !! என்னைய காதலிச்சா பின்ன என்ன ஆகும்?

Anonymous said...

//அருமையான கொலவெறி! சூப்பர்!! //

வழக்கம் போலவே படிக்கலியா?

Anonymous said...

//Interesting! Good!! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படி நன்றிசொல்றது?

Anonymous said...

கவிதை நன்றாகத்தானே இருக்கிறது, பின்ன ஏன் கவுஜை லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க? சரியான மனநிலைல படிக்காம விட்டுருப்பீங்கன்னு நம்புறேன். இல்லைன்னா உங்க ஸ்டாண்டார்ட் ரொம்ப அதிகம். :)

bala said...

//தூங்குகிறது
ஒரு பெட்டை நாய்
இதழ்கள் ஓரம் கொடூரம்
சுமந்தபடி
பூணை ஒன்றின் //

கிழமத்தூர் அய்யா,
என்னங்க நீங்க,இப்படி எழுதிட்டீங்க?மஞ்ச துண்டு அய்யாவை பெட்டை நாயாவும்,மரம் வெட்டியை கடுவன் பூனையாவும் உருவகப்படுத்திட்டீங்களே?என்ன கொலைவெறி காதலோ போங்க.

பாலா