மீண்டும்



வார்த்தைகளற்ற
சூனியத்தின் நீட்சியில்
பிரக்ஞையற்று
மௌனத்தின் மீதேறிய
பயணத்தில்
பார்வைகளின்
விளிம்புகளை விட்டு
விலகிச் செல்லும்
ஊர்திகளாய்ப் போன
உள் மனதின்
ஊணர்வுகளோடு
ஒரு பொழுதேனும்
சண்டையிடத் திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!