தங்கமணி சிறப்புக் கவிதை !

காஃபிக்கு எப்படி தே(ன்)நீர் சுவை அளிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?

கைப்பக்குவம் தான் சொல்லுவார்கள், உன் 'கால்' பக்குவம்
எனக்கு மட்டும் தான் தெரியும். ஆமாம்,
நீ செல்போனில் அழைத்தால் செல்போனே அதிருது...வைப்ரேசன் !

என்னிடம் உனக்கு இருப்பது தோழமையா ? அன்பா ?
வாங்கும் குட்டுகளில் என்றும் தலைக் குழப்பம் தான்,
அப்பளக் குழவிக்கு விடை தெரிந்திருக்கலாம் !

நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !

இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது, எதற்கும்

புடைப்படையும் முன் முன்னச்செரிக்கையாக சொல்லிவிடுகிறேன்
ஏப்ரல் 1 க்கு இதற்கும் மேல் பொய் கூற மூடியா ?

http://kusumbuonly.blogspot.com/2009/02/ar.html

ஜட்டிக் கவுஜைகள்-1


என்றைக்காவது ஒருநாள்
இன்று போலவே
என்னுடையதும் தொலைந்து
போயிருக்கும்
ஜட்டிகளின் வழியே காணக்
கிடைக்கும்,
கனவுலகம் ஒன்று
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
ஆப்பிள்
இலைகளையாவது
வைத்திருந்தது
இந்த சாத்தானின் சதிவலை
புரியாமல் ஜட்டி போடுவதும் குட்டி
தேடுவதும் வாழ்கை என்று
அலையும் சிலரை
முட்டிக்கு முட்டி தட்டினால் என்ன?

-மகேந்திரன்.பெ

விட்டில் பூச்சி


வெற்று வானமொன்றை
உற்றுப் பார்த்திருக்கும்
கண்களாய் கவிழ்ந்துகிடக்கும்
குப்பைத் தொட்டியருகில்
குலைக்கத் திராணியற்று
வெற்றுடம்பாய்க் கிடக்கும்
சொறிநாயின் சிந்தனைகள்
என்னவாகவிருக்க
முடியும்
என்று எனக்குள்ளே
கருவியபடி காத்திருத்தலின்
அவசியம் ஏதுமின்றி
பிணியிழந்த சடலமொன்று
கடந்து போன பாதைமீது
வைத்த விழி
வாங்காத வண்ணத்தப்
பூச்சியும், வருகை தராத
அரை டவுசர் மாணவனும்
கும்மியடிக்கக் கிளம்பிவிட
வெற்று வகுப்பரையில்
விட்டத்தை வெறித்துப் பார்த்தே
சிதறிப் போன கண்ணாடித்
துண்டுகளைச் சேகரிக்கும்
விட்டில் பூச்சியொன்று
என் கட்டிலருகே
விளக்கைத் தேடி!

-நாமக்கல் சிபி

மீண்டும்



வார்த்தைகளற்ற
சூனியத்தின் நீட்சியில்
பிரக்ஞையற்று
மௌனத்தின் மீதேறிய
பயணத்தில்
பார்வைகளின்
விளிம்புகளை விட்டு
விலகிச் செல்லும்
ஊர்திகளாய்ப் போன
உள் மனதின்
ஊணர்வுகளோடு
ஒரு பொழுதேனும்
சண்டையிடத் திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!

கவிதையெல்லாம் ரத்தம்


சின்ன கரையெங்கும்
விஷம் தோய்ந்த கத்திகளோடு
நடமாடுகின்றன
காற்றின் பிணங்கள்
என் சிறு வயிற்றில் கீறலுடன்
கொலைததும்ப வழிகிறது குடல்
மதுபாட்டிலும் மறுகையில்
குறுவாளும் கொண்டு காற்றாடி
வழியே வானத்தை அளக்கிறேன்
எல்லா நிழல்களைப் போலவும்
என் பின்னேயும் தேய்ந்து மறைகிறது
ஒரு சின்ன ஒளிக்கீற்று
பின்னே முன்னே எந்த தடயமும் அற்ற
பெரிய கதவுகள் வழியே
தெறித்து தாவுகிறது உன் உயிர்
இன்னும் கொஞ்சம் காலம்
தேய்ந்திருக்க
எப்போது வருமென்று தெரியாமல்
என்னை பின்தொடர்ந்தே
வருகிறது
ரத்தம் தெறிக்கும் வரிகளுடன் ஒரு
கவிதை.

எங்கே எனது கவிதை ?


கற்பனையின் வறட்சியில்
மறைந்து போனது
எனது கவிதைகள் ?

எதை எழுதுவது ?

குறிக்கவிதைகள் எழுத
நான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் இல்லையே !

ஆத்திரம் தீர 'தீர்த்த' யாத்திரை செய்து
தினம் எழுத நான்
நாமக்கல்லார் இல்லையே !

கவிஜை எழுதி அதை கிண்டல்
அடிக்க நான் சாத்ததன் குளத்துக்காரர் இல்லையே !

காதல் கவிதை எழுதி
கலங்கடிக்க நான்
அருட்பெருங்கோ இல்லையே !

பாதிப்பில் படித்ததை
வடித்து வைக்க நான்
எஸ்கே ஐயா இல்லையே !

தேமா புளிமா அறிந்து
கட்ட(ட)ம் கட்டி எழுது நான்
இலவச கொத்தனார் இல்லையே !

'எழுச்சி' கவிதை எழுத
'குறி' சொற்களை தேட நான்
பொட்'டீ'க்கடை சத்தியா இல்லையே !

கற்பனை வறட்சியை தீர்க்க
எனக்கும் ஒரு மழைத்துளி
வேண்டி பருவ 'காலத்திற்காக' தவமிருந்தபடி
தற்போது நின்று கொண்டு இருக்கிறேன்
எங்கே எனது கவிதை ?

--
அன்புடன்,

கோவி.கண்ணன்