அரோகரா....

பனிரெண்டாவது பியில்
ஏறி புரட்சி வரப்போகிறது
என்றும் அது
தனக்கு ஏற்கனவேயுள்ள
தடைகளை தகர்த்து
வெகு வேகமாய் முன்னேற்றம்
கண்டுகொண்டிருக்கிறது என்றும்
சாலையோர பூங்காவில்
எப்போதோ சந்தித்து
விடைபெறாமல்
போன நண்பர்
குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
புரட்சி ஒன்றும் சொல்லிவிட்டு
வருவதற்கு அத்தை மகளோ
மாமன் மகளோ
இல்லை அடுத்த வீட்டு
சூப்பர் ஃபிகரோ இல்லையே
தோழர் என்ற என் கேள்வியை
நண்பர் வாங்கித் தரப்போகும்
ஒற்றை தேநீர், வடை நிமித்தம்
பொறுத்துக்கொள்ள வேண்டிய
அளவில்,
என் எப்போதும் முன் உள்ள
தந்திரமாக ஒளிந்து தப்பித்தல் வித்தைகளை பயன்படுத்தி
சமாளித்துவிட்டேன்.
நண்பர் ஒன்றும் அப்படி
வடை சாப்பிடும் ஆள்
இல்லைதான் .
எனக்கு முன் ஏகப்பட்ட வேலைகள்
காத்துக் கிடக்கும் வேளையில்
தமிழ் தேசியம்,
முப்பாட்டன் முருகன்,
திருவிளையாடல்
படம் பற்றியெல்லாம்
கேட்டுத் தொலைக்க வேண்டி
இருக்குமே.....
ம்ம்ம்ம்ம்ம்
வெற்றிவேல்
வீரவேல்
என்ற வெற்று முழக்கம்
சொல்லி பச்சை ஆடையில்
பவனி வரவேண்டிய காலம்
என்ன ஹிந்து முன்னணிக்கு
மட்டுமே உரித்தானதா
என்ன?
நாளைக்கே நான்
2016ல்
பாயும்போது நீங்களும் சொல்லக்கூடிய ஆள்தான்
காக்க காக்க
வாரணம் ஆயிரம்
ச்சே......
சக்தியை நோக்க சரவண பவணார் ....
அதுவும் இல்லையா?
வெற்றி வேல் வீர வேல்...

மயிர் கவிதை !


என் இமைகளின் மேல்
உனக்காகவென்றே
சில மயிர்களை வளர்த்து
வைத்திருக்கிறேன்
அது வளர்த்ததா வளர்ந்ததா?
தெரியாது.
உன்னை எனக்கு பிடிக்க
ஏழாயிரம் காரணம் இருக்கலாம்
ஆனால் உனக்கென
உன்னை அடையாளப் படுத்த
என
ஊர் மக்கள் வைத்திருந்த
ஒரே அடையாளம் உன் மயிர்.
கூந்தல் என்று நாகரீகமாகவோ
ரோமம் என்று
உரோமம் அற்ற ரோமன்களை
சொல்லியோ முடியற்ற ஒரு
இனத்தை மயிருக்கு
அடையாளம் ஆக்கினார்கள்.
அது ரோமமோ உரோமமோ
முடியோ?
அதுவல்ல சிக்கல்,
மும்முடிச் சோழன் மிக
நீண்ட மயிர் கொண்டவனோ என்னமோ?
எது எப்படி போனாலும்,
மிக நீண்ட
மயிர்களால் ஆன என்னவளுக்கு
வேறென்ன என்னால்
செய்துவிட முடியும்
இந்த கவிதையைத் தவிற?

கவிதைகளை கருவேற்றம் செய்கிறேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சிக் கொஞ்சியாய்
என்
கவிதைகளை
கருவேற்றம் செய்கிறேன் 
அவன் அவள் அது
என்ற மூன்றில் 
இருந்தும் மீள
முடியாத ஒரு காலம் இது,
என் கவிதைகளை
ரசிப்பவர்கள் யாரும்
என் முகவரிகளை
தேடுவதில்லை.
காரணம்......
இது கவிதையாய் இல்லாததால்
கூட இருக்கலாம்

#சாவுங்கடா

#சாவுங்கடா!

மோதிக்கொள்ளப் போகும் 
இரண்டு கேஸ் டேங்கர்கள்
மேல் முட்டாமல் இருக்க
புளியமரத்தின் மேல்
மோதியது மூன்று சக்கர
ஆட்டோ....
டேங்கர் லாரிகள் இரண்டும் 
ஒதுங்கிச் செல்ல
முட்டிய ஆட்டோ முழுக்க
ரத்தம்...
டிரைவர் தவிர
எலோரும் மரணம்.
டிரைவர் ஆன் தி வே!!

#சாவுங்கடா


முன்பெல்லாம் அரசாங்கம்
பணம் கொடுத்து
அரிசி, ஹார்லிக்ஸ்
எல்லாம் கொடுத்துதான் 
குடும்பக் கட்டுப்பாடு
செய்துகொண்டிருந்தது 
இப்போதெல்லாம்
குடி மக்களே முன்வந்து
செய்துகொள்கிறார்கள்.
டாஸ்மாக்கில்.

#சாவுங்கடா


மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
கயிற்றின் முனைகளை
பற்றிக் கொண்டே
கடந்து கொண்டிருக்கிறது
காலம்,
கிடைக்கப் போவது
கழுத்தாகவும் இருக்கலாம்
இப்படி ஏதாவது
மொக்கை
கவிதையாகவும்
இருக்கலாம்.

#சாவுங்கடா

தூக்கு தூக்கி

அவன்
கீழே போய்க்கொண்டிருந்தான்
அவள்
மேலே போய்க்கொண்டிருந்தாள்
லிஃப்ட் இயக்குனர்.
இரண்டு பேரையும்
தன் சிசி மானிட்டரில்
வெறித்துப் பார்த்தபடி
சுவிட்சை ஆஃப்செய்தான்
சாவுங்கடா என்ற
உலகுபுகழ் ஹேஷ் #டேகை
தன் கவிதையின்
கடைசி வரியாய்
எழுதிக் கொண்டே

#சாவுங்கடா

அவன் என் ஜாக்கி ஜட்டி......

அவன்.... அவனை அணியவில்லை என்றால் தான் சுகம். தூக்கியெறிந்து சுதந்திரமாக இருக்கலாம் என்றால்
என்னருகில் இருக்கும் கார்ப்ரேட் கன்னிகள் நலன் பேணி 
அவன் என்னுடன் ஒட்டிக்கொள்கிறான். இரவினில் பாலியியல் வறட்சியால் 
நான் சிந்தும் கண்ணீரை காத்து தனக்குள்
வாங்குபவனும் அவனே.... பலமுறை என் கால்சட்டையின் 
பற்கள் படாமல் காத்தவன் அவன். காதலியின் அவசரத்துக்கு ஈடுகொடுத்து
அவளுக்கு இணையாக ஆடையவிழ்ப்பில் 
தோல்வியடைய காரணமும் அவன். அவன் என் ஜாக்கி ஜட்டி...... __ இலக்கியம் படிக்காதவன்.
https://www.facebook.com/profile.php?id=100007511465255

கோவணங்களால் ஆனது என் வேட்டி


ஒரு காலத்தில்
என் பாட்டனும் பூட்டனும்
கோவணங்களை வேட்டிகளைக்
கொண்டே தயார் செய்துகொண்டனர்
புதுக் கோவணம் என்ற சொற்ப் பதமே
அப்போது இருந்திருக்காது
இப்போது போல
அப்போது ஜாக்கியோ
கால்வினோ இல்லை
இருந்ததெல்லாம் பழைய நைந்து போன
வேட்டி மட்டுமே
அதுவும் அந்த வேட்டி இனிமேல்
கோவனத்துக்கு மட்டுமே
ஆகும் என்ற காலமான
காலம்
இப்போது லுங்கியும்
வேட்டியும் அணிபவனைக்
கண்டால் ஏளனமாய் பார்க்கும்
எல்லோரின் முன்னோர்களும்
ஒரு காலத்தில் அந்த கிழிந்த வேட்டியையே
கோவனமாக
அணிந்த உண்மையை நாம்
உரக்கச் சொல்வோம்.