குட்டையாய் இருந்த
சில குடைக்காளான்கள்
அடியில்
அட்டை போல் ஒட்டிக் கொண்டு
அதன் குருதி உறிஞ்சும் கோரப்
பற்களில் வடியும் ரத்த
நாளங்களின்
வன்ம வெடிப்பில்
காத்திருத்தலின்
கடைசி வினாடிகளை
புழுநெளியும் பச்சை
புல் வெளிகளின்
உள்ளே எனக்கானது எனச்
சொல்லும் ஏதாவது ஒரு
விஷமக் கணங்களை
அசைபோட்டபடி எல்லா
இரவுகளுக்கு உள்ளேயும்
ஒளிந்துகொண்டு
வன்மப்
பிரச்சாரம் செய்யும்
உனக்காகவும் இருக்கிறது
என் ஞாபகப் பெருவெளியில்
ஒரு சிறு இடம்.
1 comments:
unga nyapaga perivelivil tholinthu ponen
Post a Comment