புவியீர்ப்பு என்னும் ஏகாதிபத்திய சக்தி

பிரபஞ்சப் பெருவெளியில் 
விளைந்திருக்கும் 
நட்சத்திரப் பயிர்களை 
உய்விக்க எண்ணியே 
உமிழ்ந்து விடுகிறேன் 
மல்லாக்கப்படுத்துக்கொண்டு 

எனது ஜீவ எச்சிலை 
அங்கே எடுத்துச் செல்லாத 
புவியீர்ப்பு என்னும் 
ஏகாதிபத்திய சக்தியை சாடுங்கள் .

என் எச்சில்பட்டு 
போதியாய் பூமி நோக்கி 
வளர எண்ணிய 
நட்சத்திரப் நாற்றுகளின் 
நல்லக்கனவை நாசமாக்கியது ஏன் என்று ..!!


....உமா மகேஸ்வரன் லாஓட்சு

0 comments: